Sahityapedia
Sign in
Home
Your Posts
QuoteWriter
Account
24 Apr 2025 · 1 min read

குளு குளு அறை

இதோ:கோடைகால
அடைக்கலம்
வெளியே
சூரியன் பிரகாசிக்கிறது,
ஒரு நெருப்புப் பந்து
பூமி வெப்பமடைகிறது…
மற்றும் அனைத்து வெப்பம் காற்று
வெப்பம் மற்றும் மூடுபனியால் அடர்த்தியாக உள்ளது
சுட்டெரிக்கும் கோடையின்
முடிவற்ற திகைப்பு இது

ஆனால் ….
நான் ஒருஅடைக்கலத்தை வெப்பத்திலிருந்து தப்பிக்க
ஒரு புகலிடத்தைக் கண்டுபிடித்தேன்
அதுதான் குளு குளு அறை வீட்டிற்குள் ஒரு சரணாலயம்
குளு குளு யந்திரம்
குதுகளமாய் பாட
ஒரு மென்மையான ஒலி
அது காற்றைக் குளிரச் செய்து
என்னைச் சுற்றிலும்
கிளு கிளுபாக
போர்த்திக் கொள்கிறது
அறை வெப்பநிலை குறைகிறது
என் தோலில் வியர்வை காய்கிறது
நான் குளிரில் குளிக்க உள்ளுக்குள் ஒரு பெரிய பெருமூச்சு விட்டேன்
வெளியுலகம் சூடாகவும் பிரகாசமாகவும் இருக்கலாம்…
ஆனால் …இந்த அறையில் எல்லாம் அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் மிகவும் சரியாகவும் இருக்கிறது
எனவே கோடை வெயில்
வெளியே தெறிகட்டும்
நான் இங்கேயே இருப்பேன்
எங்கே குளிர்ச்சியாக இருக்கிறதோ அங்குதானே நான் வசிக்க முடியும்?
அப்படி இந்த நவ நாகரீகம்
பழகி விட்டது
இந்த குளிரூட்டப்பட்ட அறையில்
நான் கோடை வெப்பத்தின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க…
“குளுகுளு மகிழுந்தில்
மாண்புமிகு மந்திரி அவர்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை
காரின் கண்ணாடி கதவு திறக்காமல்
சுகமாய் சுற்றிப் பார்த்தது மாதிரி”
இந்த குளுகுளு அறை எனக்கு
ஒரு கோடைகால குளு குளு புகலிடம்…
அது என் உடல் நிலைக்கு தரும்
வருங்காலத்தில் சில சங்கடம்…
என்ன செய்ய?
கோடை வெப்பம் சில சமயம்
என்னை புரட்டுகிறது
சிலை சமயம்
தூங்கவிடாமல் விரட்டுகிறது…

+ ஓட்டேரி செல்வ குமார்

Loading...